search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிடம் நகை பறிப்பு"

    பாபநாசம் அருகே முகவரி கேட்பது போல் நடித்து விவசாயிடம் நகை மற்றும் செல்போனை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள எடையிருப்பு கிராமம் குடியான தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 36). விவசாயி.

    இவர் நேற்று நள்ளிரவு தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் 2 பேரும், இளையராஜாவிடம் , ஒருவரது பெயரை சொல்லி அவரது வீடு எங்கே உள்ளது? என்று முகவரி கேட்டனர். இதை நம்பி இளையராஜா அவர்களிடம் பேசினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2 வாலிபர்களும் திடீரென இளையராஜா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் அவரது சட்டை பையில் இருந்த செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    முகவரி கேட்பது போல் நடித்து நகை- செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை பற்றி இளையராஜா, பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்.

    ×